19 Feb 2010

நல்லதாங்கா கிணறு

உங்களுக்கு நல்லதாங்கால் கதை தெரியுமா..? எனக்கு சின்னவயசுல இருந்தே தெரியும். என் அம்மாவும் பாட்டியும் அடிக்கடி இந்தக்கதையை சொல்வார்கள். அப்பஇந்த கதையை கேட்கும்போதெல்லாம் நல்லதாங்கா பாவம்னு தோணும். இக்கதைப்படி கணவனை இழந்த நல்லதாங்கா தன் ஏழுபிள்ளைகளுடன் அடைக்கலம் தேடி அண்ணன் விட்டுக்கு வருவாள். வந்த இடத்தில் அண்ணியின் கொடுமைக்கு ஆளாகுவாள். பச்சை வாழைமட்டையில் அடுப்பெரிக்க சொல்வது, குழந்தைகளின் சுடு கூழை ஊற்றுவது என அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதியின் கதையை  ஒட்டிசெல்லும் இக்கதை. ஒரு கட்டத்தில் அண்ணியின் கொடுமையை பொறுக்கமுடியாத நல்லாதாங்க தன் ஏழு பிள்ளைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக கிணற்றில் தள்ளிவிட்டு தானும் விழுந்து தற்கொலை செய்துகொள்வாள். விஷயம் கேள்விப்பட்ட அவளது அண்ணன் மனைவியை கொன்றுவிட்டு தானும் அக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள போவான். அப்பத்தான் கடவுள் அவன் முன்னாடி தோன்றி அனைவரையும் உயிர்ப்பித்ததாக கதை முடியும்.          

18 Feb 2010

Bekal Fort

நான் எப்ப பம்பாய் படம் பார்த்தேனோ அப்பில இருந்து நமக்கு ஒரு அவா இந்த இடத்தை போய்பார்க்கனும்னு. ஆனா இரண்டு வருசத்துக்கு முன்னாடிதான் போக முடிஞ்சது. மாமா மங்களூரில் இருந்ததால் மங்களூரில் இருந்து காசர்கோடு வந்து இங்கு வந்தேன். இவ்விடம் காசர்கோடில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

எனது பயணமும் சில செண்டிமெண்ட்ஸ்ஸூம்

னக்குன்னு சில செண்டிமெண்ட்ஸ் இருக்கு. அது விடாம என்னை துரத்திகிட்டும் இருக்கு. நான் எந்த பஸ்ல ஏறினாலும் மறக்காம "நாயகன்" படம் போட்டுடுவாங்க. இதுவரை இந்த படத்தை 20 தடவைக்கு மேல பார்த்து இருக்கேன். என்னஒன்று எத்தனை தடவை பார்த்தாலும் புதுசாபாக்குற மாதிரி ஒரு உணர்வு இருக்கு. மணியோட making அப்படி. நல்லவேளை எனக்கு விஜய் ராசி இல்லாம போச்சி.


10 Feb 2010

சதுரகிரி

     நம்ம தமிழ்நாட்டுல இரண்டுமலைகள் சித்தர்களுக்கு பெயர்போனவை. ஒன்று கொல்லிமலை இன்னொன்று சதுரகிரி. கொள்ளிமலைசித்தர்கள் மாயமாந்திரிக விஷயங்களுக்கு பெயர்போனவர்கள். நம்ம விட்டாலாச்சார்யா படம்மாதிரி. சதுரகிரி சித்தர்கள் வேறமாதிரி ரொம்பநல்லவங்க இறைவனை தேடுவதுதான் அவர்களுடைய குறிக்கோள். (இன்னும் கூட... கிடைத்தாரா..?)

2 Feb 2010

அம்பை டு கோதையாறு

மணிமுத்தா டேம், மணிமுத்தா அருவி;

    நீங்க அம்பையிலிருந்து கோதையாறு சென்றால் முதலில் உங்களை வரவேற்ப்பது மணிமுத்தா அணைதான். அம்பையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வணை காமராஜரால் கட்டப்பட்டது. மழைக்காலங்களில் மட்டும் இங்கு நீர் நிறைந்து காணப்படுமாம். மேலும் இங்கு இரண்டு காவல்துறை பயிற்சிபள்ளிகள் உள்ளன.

                                 (பெரிதாகதெரிய மேலே கிளிக்கவும்)

1 Feb 2010

பயணம்

 


"கேளுடே பண்டாரம், ஆத்ம பிரகாசம்னு ஒண்ணு உண்டு, ஆத்மா தன் வெளிச்சத்தை வெளிப்படுத்தற விதம் அது. இ.எம்.எஸ்ஸுக்கு ராஷ்ட்ரியம் ஆத்மபிரகாசம். சார்லஸ் சோப்ராஜுக்கு திருடினா அத்மபிரகசம். ஒரோத்தருக்கு ஒரோன்னு. ஒராளோட காரியம் மற்றவர்க்கு புரியாது. அதான் மனுஷனுக்க காரியம்".
                                                                                            -ஏழாம் உலகம், ஜெயமோகன்.